மின்னல் தாக்கி விவசாயி சாவு

திசையன்விளை அருகே மின்னல் தாக்கி விவசாயி இறந்தார்.

Update: 2021-09-17 19:04 GMT
திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம்பாடு கீழத்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 55). இவர் அங்குள்ள ஒரு தோட்டத்தில் புல் பறித்து கொண்டிருந்தார். 

அப்போது திடீரென்று மின்னல் தாக்கி விஜயன் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்