பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

திருச்சுழி அருகே பெண்ணிடம் 3 நகையை பறித்து சென்றனர்.

Update: 2021-09-18 18:40 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி தாலுகா, இலுப்பைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 49). இவரும், இவருடைய உறவினர் முனியாண்டி என்பவருடன்மோட்டார் சைக்கிளில் விதை நெல் வாங்குவதற்காக காரியாபட்டிக்கு வருவதற்கு கல்யாணிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வசந்தாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்