நாமக்கல்லில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல்லில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-19 18:34 GMT
நாமக்கல்,

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பெரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35). லாரி டிரைவர். இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று ராஜாவை குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர்.

இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். 

இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி சீத்தா கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்