பட்டாசு திரி கடத்தியவர் கைது

தாயில்பட்டி அருகே பட்டாசு திரி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-19 18:56 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை சப்&இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சல்வார்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது சிவகாசி சிவகாமி புரத்தை சேர்ந்த பிச்சையா (வயது 45) என்பவர்  அனுமதியின்றி வெள்ளை திரி 70 குரோஸ் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனத்தையும், திரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் பிச்சையாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் செய்திகள்