மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
தேவகோட்டை அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தேவகோட்டை,
தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 10&ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றார். இது குறித்து மாணவியின் பெற்றோர் தேவகோட்டை போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபரும், மாணவியும் கோவையில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு மருத்துவ சோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாணவியை கடத்தியதாக அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தன