சிவகாசியில் சாரல் மழை

சிவகாசியில் நேற்று சாரல் மழை பெய்தது.

Update: 2021-09-19 19:11 GMT
சிவகாசி, 
சிவகாசியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த இடியுடன் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. நகர பகுதியில் மழை பெய்யவில்லை. சிவகாசியை சுற்றி உள்ள கிராமப்பகுதியில் இந்த மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. மக்கள் மாலை நேர மழையை ரசித்தனர்.

மேலும் செய்திகள்