எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே மணியாரம்பட்டி பகுதியில் உலகம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வராஜ் (வயது 38) மணியாரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 14 மதுபாட்டில்களுடன் செல்வராஜை உலகம்பட்டி போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்