மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல்

தேவகோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-09-20 19:19 GMT
தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணல் திருட்டு

தேவகோட்டை தாலுகா பொன்னொலிக்கோட்டை, செல்லியன் வயல் கண்மாயில் கிராவல் மண் அள்ளுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொன்னொலிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சின்னராஜா மற்றும் உதவியாளர் நேரில் சென்றனர்.அப்போது அங்கு ஒரு டிராக்டர், மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் வைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் திருவேகம்பத்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் டிராக்டர், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். போலீசாரை பார்த்ததும் மணல் திருடியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கிராவல் மணல் அள்ளியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

டிப்பர் லாரி பறிமுதல்

அதேபோல் சருகணி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது காளையார்கோவிலில் இருந்து திருவாடனை சென்ற டிப்பர் லாரியில் அரசு அனுமதி இல்லாமல் ஓடை மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. திருப்புவனம் அகரத்தை சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுநர் லிங்கமுத்து (52) என்பவரை கைது செய்தனர். டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்