காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 19:47 GMT
விருதுநகர்,
விருதுநகரில் சீரான குடிநீர் வினியோகம் வழங்க வலியுறுத்தி பெண்கள் காலி குடங்களுடன் விருதுநகர் அன்னை சிவகாமி புரம் பகுதியில் முறையாக நேற்று காலை திடீரென காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்