சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

சேலம் ராஜகணபதி கோவிலில் விநாயகருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

Update: 2021-09-21 20:47 GMT
சேலம், செப்.22&
சேலம் ராஜகணபதி கோவிலில் நேற்று விநாயகருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
ராஜகணபதி கோவில்
சேலம் கடைவீதி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10 நாட்களுக்கு தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 9 நாட்களாக பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவின்நிறைவு நாளான நேற்று விநாயகருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று காலை கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால்  விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
மலர்களால் அலங்காரம்
தொடர்ந்து விநாயகருக்கு பட்டாடை உடுத்தப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.  மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்