ஓட்டல் அதிபர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓட்டல் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-22 18:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). இவர் ஓட்டல் நடத்தி வந்தார். வீடு கட்டுவதில் கடன் ஏற்பட்டதால் இவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய மனைவி ஆவுடைபார்வதி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்