சரக்கு வேன் மோதி மூதாட்டி பலி

சரக்கு வேன் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2021-09-22 18:57 GMT
க.பரமத்தி
க.பரமத்தி அருகே உள்ள பவுத்திரம் முத்துசோளிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி ரஞ்சிதம் (வயது 60). இவர் நேற்று காலை தனது வீட்டின் முன்பு கரூர்&கோவை சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பூரிலிருந்து கரூரை நோக்கி வந்த சரக்கு வேன் ஒன்று ரஞ்சிதம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ரஞ்சிதம் பரிதாமாக இறந்தார். இந்த விபத்து குறித்து, க.பரமத்தி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்குப்பதிந்து, சரக்கு வேன் டிரைவர் திருப்பூர் மாவட்டம், ராயபுரத்தை சேர்ந்த குமார் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்