போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-23 19:37 GMT
விருதுநகர், 

மத்திய அரசு வேளாண் சட்டத்திருத்தங்களைக் கைவிடக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகரில் தொழிலாளர் முன்னேற்ற சங்க மண்டலபொதுச்செயலாளர் ராஜா செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் 250 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்