9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை - சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவு

சென்னையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டார்.

Update: 2021-09-25 12:12 GMT
திருவொற்றியூர், 

சென்னை ராயபுரம் ஆட்டுத்தொட்டி ஆஞ்சநேயர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர், பிராட்வேயை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கினார். அதில் கணேசனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சத்தை அரசு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்