சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கடத்த முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-25 20:22 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 19). இவர், 13 வயதுடைய 9&ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்கு கடத்த முயன்றதாகவும், அந்த மாணவியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அதற்கு உடந்தையாக இருந்த இலையூர் கிராமத்தை சேர்ந்த அவரது அக்காள் சித்ரா, இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் பூவரசன், செல்வகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்