தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-26 18:03 GMT
சிவகாசி, 
சிவகாசி சிலோன் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 37). இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சங்கீதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேல்முருகன் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்