விருதுநகர்,
விருதுநகர் மாத்திநாயக்கம்பட்டி ரோட்டில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் புவனேஸ்வரி (வயது 38). இவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக சூலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் 39 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், புவனேஸ்வரியை கைது செய்தனர்.