கைது

வாளுடன் நின்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-26 18:39 GMT
 விருதுநகர், 
விருதுநகர் பஜார் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள முட்புதர் பகுதியில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பாத்திமா நகரை சேர்ந்த சரவணன் (வயது 40) என தெரியவந்தது அவரை சோதனை செய்த போது அவரிடம் வாள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்த போது திருப்பூர்&தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன் என்பவரை கொலை செய்தவர்களை பழிக்குப்பழி வாங்க புதரில் மறைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சரவணனிடம் இருந்து வாளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். சரவணன் மீது பஜார் போலீசில் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (52). இவர் அங்குள்ள குடிநீர் தொட்டி அருகே நின்று கொண்டிருந்த போது ரோந்து வந்த போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அவரை விரட்டி பிடித்து சோதனை செய்த போது அவரிடம் நீண்ட வாள் இருந்தது. இவர் ஏற்கனவே கிழக்கு போலீசில் பல கொலை வழக்குகள் உள்ளது என விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வாளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்