கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். தற்போது 185 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.