திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-09-27 19:35 GMT
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திராவிடர் தமிழர் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில பொதுச்செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளர் முருகேசன், நிதி செயலாளர் முத்துராஜ், மாநகர செயலாளர் வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
அதில், ஆதி திராவிடர் நலத்துறையால் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்து அருந்ததிய மக்களுக்கு சேரன்மாதேவி சேரன் கோவில்பத்து பகுதியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
அம்பை அருகே தெற்கு பாப்பாங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் கடந்த 25-ந் தேதி தூக்கில் தொங்கி இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருடைய உறவினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்