வாலிபரை மிரட்டியவர் கைது

நெல்லையில் வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-27 19:38 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என். கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைகண்ணன் (வயது 26). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை வாய்க்கால் பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்த பேராச்சி (23), சுடலை கண்ணனிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராச்சியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்