மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-27 21:09 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 44). இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கீழப்பழுவூருக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். இந்நிலையில் குளிப்பதற்காக தொட்டியில் தண்ணீர் ஏற்ற மோட்டார் அறைக்கு சென்று சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்