ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-28 19:49 GMT
விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் அருப்புக்கோட்டை வட்டாரத்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் குரு.நாகப்பன் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். காலமுறை ஊதியம் பெறும் அனைத்து அரசுஊழியர்களின் பணப்பலன்களும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு பொருந்தும் என்ற அரசு உத்தரவை புறக்கணித்து கிராம உதவியாளர்களுக்கு புதியபங்களிப்பு ஓய்வுதிட்டத்தின் கீழ் சந்தா பிடிப்பதை நிறுத்தம் செய்ய உத்தரவிட்ட நிதித்துறையின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்