திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

Update: 2021-09-29 11:40 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

நேற்று அதிகாலை முதல் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்த கூட இடம் இல்லாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து முருகபெருமானை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்