திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

Update: 2021-09-30 10:02 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த புட்லூர் வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மகன் பிரதீப் குமார் (வயது 28). நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிரதீப்குமார் திடீரென தன்னுடைய அறைக்கு சென்று அங்கு இருந்த கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேகநாதன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து பிரதீப்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்