விஷம் குடித்து பெண் சாவு

சிவகிரியில் விஷம் குடித்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-01 20:55 GMT
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் கீழூர் ராமசாமியாபுரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (38). இவர்களுக்கு கலையரசன் (17) என்ற மகனும், சந்தியா (15) என்ற மகளும் உள்ளனர். தற்போது கலையரசன் 12-ம் வகுப்பும், சந்தியா 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ராமலட்சுமிக்கு வயிற்றில் கட்டி இருந்ததாகவும், அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்தநிலையில் நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ராமலட்சுமி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும்,  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலட்சுமி இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்