காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 38 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 992 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,248 ஆக உயர்ந்தது. 385 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.