தீ விபத்தில் சான்றிதழ்கள் எரிந்து நாசம்
பள்ளி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சான்றிதழ்கள் எரிந்து நாசமானது.
காரியாபட்டி,
விருதுநகர் மல்லாங்கிணறு ரோட்டில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி அலுவலக அறையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பள்ளிசான்றிதழ்கள் மற்றும் வங்கி சேமிப்பு பத்திரங்கள் தீயில் எரிந்து நாசமாகி விட்டதாக பள்ளி முதல்வர் ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.