கமுதி,
கமுதி அருகே நெருஞ்சுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனி யாண்டி (வயது71). இவர் அந்த பகுதியில் வயல் பணியை முடித்துவிட்டு சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, சரக்கு வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன டிரைவர் எருமைகுளத்தை சேர்ந்த மாயழகு (45) என்பவரை கைது செய்தனர்.