நங்கவள்ளி அருகே பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

நங்கவள்ளி அருகே பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-10-04 23:38 GMT
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலுக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் சந்திரசேகர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மணி, சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. செம்மலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர்கள் மாணிக்கவேல், செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் எமரால்டு வெங்கடாசலம், பெரிய சோரகை ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி ரத்தினவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்