பெண் தற்கொலை

பெண் தற்கொலை

Update: 2021-10-05 20:17 GMT
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள மதகுபட்டியை சேர்ந்தவர் பிடாரன். இவரது மனைவி கோகிலா (வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கோகிலா விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை அறிந்த கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கோகிலாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பிடாரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி. மங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்