காரைக்குடி,
குன்றக்குடி போலீஸ் சரகம் கோவிலூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது50). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் கண்மாய் கரை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.