திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று வரை 309 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 490 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 53 ஆயிரத்து 516 பேர் குணமடைந்து உள்ளனர். 665 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.