108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

Update: 2021-10-06 20:00 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 23). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இந்நிலையில் ஜெயந்தி மீண்டும் கர்ப்பமானார். நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கீழப்பழுவூரில் இருந்து பாப்பாங்குளம் கிராமத்திற்கு விரைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயந்தியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கீழப்பழுவூர் அருகே வந்தபோது ஜெயந்திக்கு பிரசவ வலி அதிகமானதால், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு. இதையடுத்து ஜெயந்திக்கு, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் நீலகண்டன் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தை மற்றும் தாயை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்