கடைகள் அடைப்பு
விருதுநகரில் லாரி செட் அதிபர் பால்பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன.
விருதுநகர்,
விருதுநகரில் லாரி செட் அதிபர் பால்பாண்டி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வியாபார சங்கத்தினர் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். அதன்பேரில் நேற்று மெயின் பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.