அல்லிநகரம்:
அல்லிநகரம் அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் சித்ரா (வயது 42). இவர் பொருளாதார ரீதியாக பணக்கஷ்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமதுயாகியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.