பெரம்பலூரில் பலத்த மழை

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-10-08 20:46 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென்று மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. பலத்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் இரவில் விட்டு, விட்டு மழை தூறிக்கொண்டிருந்தது. ஏற்கனவே பெரம்பலூரில் அவ்வப்போது பெய்து வரும் மழையாலும், நேற்று பெய்த பலத்த மழையாலும் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்