மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-09 18:38 GMT
புதுக்கோட்டை:
15 பேருக்கு தொற்று 
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 9 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 295 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் தற்போது 207 பேர் உள்ளனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 412 ஆக உள்ளது.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட முள்ளூரைச்சேர்ந்த 20 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 671 ஆக உயர்ந்த நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 பேர் இறந்துள்ள நிலையில் 652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்