எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அருகில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு.

Update: 2021-10-10 03:15 GMT
சென்னை,

சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள பாந்தியன் சாலை அருகே முட்புதர் நிறைந்த பகுதியில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக எழும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எழும்பூர் போலீசார், அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், இறந்த நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது இறப்புக்கு வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்