மிலாது நபியை முன்னிட்டு 19-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்

மிலாது நபியை முன்னிட்டு 19-ந் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு.

Update: 2021-10-10 06:59 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி (நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு) தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003-ன் படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள், ஓட்டல்களில் அமைந்துள்ள மது கூடங்கள் போன்றவற்றை கண்டிப்பாக மூட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்