அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்

அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2021-10-10 21:01 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி வழிபாடு நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ தெய்வங்களுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விசாலாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோலத்தில் காட்சி தந்தார். ராஜராஜேஸ்வரி அஸ்ட்டோத்ரம், அம்பாள் அஸ்ட்டோத்ரம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் எழுந்தருளி சுவாமிகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு, பஞ்ச ஆரத்தி நடைபெற்றது.

மேலும் செய்திகள்