முதியவரிடம் செல்போன் பறித்தவர் கைது

முதியவரிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-11 18:39 GMT
நெல்லை:

தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 74). இவர் நேற்று காலை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர் நாகர்கோவில் கீரிப்பாறையை சேர்ந்த மணிகண்டன் (41) என்பதும், செல்போனை பறித்து சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்