அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவர் கைது
அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் கே.கே.நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜ் (வயது 36 )என்பவர் தனது வீட்டில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜை கைது செய்தனர்.