உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை; கணவர் கைது

உருட்டுக்கட்டையால் தாக்கி மனைவி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-11 20:41 GMT
வேப்பந்தட்டை:

உருட்டுக்கட்டையால் தாக்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 37). இவரது மனைவி புஷ்பா(27). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புஷ்பா செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனைப் பார்த்த சுரேஷ் சந்தேகப்பட்டு, யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு புஷ்பாவை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கைது
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த வி.களத்தூர் போலீசார், சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்