அரூர் அருகே விஷம் குடித்த முதியவர் சாவு

அரூர் அருகே விஷம் குடித்த முதியவர் இறந்தார்.

Update: 2021-10-13 06:43 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள எச்.நாச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 70). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்