தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்

Update: 2021-10-13 15:17 GMT
தூத்துக்குடி:
 கடம்பூர் பரிவல்லிக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). தொழிலாளி. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் அய்யனார்புரம் சோதனைச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்