புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 5¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

Update: 2021-10-14 17:07 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 5 கோடியே 16 லட்சத்து 73 ஆயிரம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 48 பெட்டிகளில் 5 லட்சத்து 75 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்