தேனி அல்லிநகரத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

தேனி அல்லிநகரத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

Update: 2021-10-15 17:26 GMT
அல்லிநகரம்:
தேனி அல்லிநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கங்கா (வயது 43). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது ஈர கையுடன் மின் மோட்டாரின் சுவிட்சை அவர் தொட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தூக்கிவீசப்பட்டார். 
அப்போது அபயகுரல் எழுப்பிய கங்காவை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்