கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.

Update: 2021-10-15 18:18 GMT
புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று 22 பேர் குணமடைந்திருந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்