பாணாவரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பாணாவரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Update: 2021-10-17 13:17 GMT
காவேரிப்பாக்கம்

பாணாவரத்தை அடுத்த போலிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 48). இவர் சோளிங்கர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். துரைசாமி பிள்ளையார் குப்பம் பகுதியில் புதிதாக வீடுகட்டி வருகின்றார். சம்பவத்தன்று புதிய வீட்டில் மின்விளக்கு போடுவதற்கு ஸ்விட்ச் பாக்ஸ்லிருந்து மின் இணைப்பு கொடுக்கும்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். 

அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்